இடி, மின்னலிருந்து காக்க விழிப்புணர்வு

  • In Chennai
  • October 17, 2019
  • 179 Views
இடி, மின்னலிருந்து காக்க விழிப்புணர்வு

சென்னை:

தமிழகத்தில் இடி மற்றும் மின்னலிருந்து காக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் 4399 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக தமிழகம் முழுவதும் 7,327 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், இடி மற்றும் மின்னலில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்