திருவனந்தபுரம்:
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு கேரள அரசு பாராட்டு விழா நடத்தியது.
திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பி.வி.சிந்து, அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்தார்.