சென்னை ரயிலில் கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்

சென்னை ரயிலில் கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்

சென்னை:
சென்னை அடுத்த பெரம்பூரில் பயணிகள் ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

ரயில் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்துக்கு வந்தபோது மாணவர்கள் கத்தியால் பயங்கரமாக ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ரயில் பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் நடைமேடையில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அங்கு செல்வதற்குள் மாணவர்கள் அனைவரும் தப்பியோடி விட்டனர். கூட்டத்தில் இருந்த ஒரு மாணவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்