சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னைக்கு திரும்பினார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து தனது 13 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் இன்று விமானம் மூலமாக அதிகாலை சென்னைக்கு வந்தடைந்தார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சித் தொண்டர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு சென்று முதலமைச்சரை வரவேற்றனர்.