மேகதாது அணை: மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்.!

மேகதாது அணை: மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்.!

சென்னை:

மேகதாது அணை குறித்து மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகாவிற்கு மத்திய அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வருகின்ற 19ம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்