புதுடெல்லி:
நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நி¬றைவேறிய.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கு இடையே, மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகி. இதனையடுத்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.