பயங்கர விபத்தில் 10 பேரின் பரிதாபம்

பயங்கர விபத்தில் 10 பேரின் பரிதாபம்

திருப்பதி:

சித்தூர் அருகே ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் அருகே பெங்களூரிலிருந்து சித்தூருக்கு கண்டய்னர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.

சித்தூர் மாவட்டத்திலுள்ள பலமனேர் அருகே மொகிளி மலை பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்துகொண்டிருந்த பயணிகள் ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதிக வேகத்தில் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் விபத்தில் சிக்கிய ஆட்டோ, மோட்டார் சைக்கிள் கார், ஆகியவை கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி நசுங்கி அவற்றில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்