சிஎஸ்கேவில் மீண்டும் சின்ன தல ரெய்னா

  • In Sports
  • September 26, 2020
  • 150 Views
சிஎஸ்கேவில் மீண்டும் சின்ன தல ரெய்னா

சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்புவது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி பதிலளித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் பலம்வாய்ந்த அணிகளில் ஒன்றாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பார்க்கப்படுகிறது. ஆனால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது சென்னை அணி. தொடர் தோல்விக்கு முழுக்க முழுக்க சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் மட்டுமே காரணம் என கூறப்படுகிறது. முக்கியமாக சென்னையின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது, சிஎஸ்கேவில் டூ பிளசிஸ் மட்டுமே அதிரடியாக ஆடி வருகிறார்.இதனால் அணிக்கு தற்போது ரெய்னா கண்டிப்பாக தேவை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், இந்த தொடரில் ரெய்னா மீண்டும் பங்கேற்க வாய்ப்பில்லை. ரெய்னாதான் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்தார். நாங்கள் அவரது முடிவை மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். எனவே அவரின் வருகை குறித்து தற்போது எதுவும் யோசிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை அணியின் தோல்வி குறித்து பேசிய அவர், விளையாட்டில் வெற்றி, தோல்விகள் இரண்டுமே இருக்கும் என்றும் நிச்சயம் சென்னை அணி பலம்வாய்ந்த அணியாக, திரும்பி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். மேலும் அம்பத்தி ராயுடு குணமடைந்து தற்போது தயாராக உள்ளார் என்று தெரிவித்த அவர், அடுத்த போட்டியில் ராயுடு களமிறங்குவார் என்றும் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்