புதுடெல்லி:
திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் திகார் சிறையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ஜாமீன் கோரி மனு அளித்த நிலையில் நேற்று அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வேன் என நேற்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இன்று காலை மாநிலங்களவையில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தார்.