சீன ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில், 32வது சுற்றில் சீன தைபேயின் பை யூ போவிடம் பி.வி.சிந்து தோல்வியடைந்து சீனா ஓபனில் நாக் அவுட் ஆனார்.
முதல் ஆட்டத்தை 13-21 என்ற கணக்கில் பி.வி.சிந்து இழந்தார். ஆனால் 2வது ஆட்டத்தில் வலுவாக திரும்பி 21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார். இறுதி ஆட்டத்தில், சீன தைபே போட்டியாளர் 21-19 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பி.வி.சிந்து தனது உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்திற்குப் பிறகு, நேராக 5 போட்டிகளில் (சீனா ஓபன் உட்பட) இறுதிப் போட்டிக்கு வரத் தவறிவிட்டார்.