பீஜிங்:
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் நேற்று திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் வடகிழக்கு பகதியான ஸின்ஜியாங் உய்குர் பகுதியிலுள்ள ஜியாஷி என்ற இடத்தில் நேற்று திர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவாக பதிவானது. இதனால், கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின. மக்கள் பெரும் பீதியடை ந்துள்ளனர்.
தகவலறிந்த சீன பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். நில அதிர்வு பகுதியான ஜியாஷி பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேறுமாறு சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.