சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல்போன 3 வயது குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலதினங்களுக்கு முன் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்த ராம்சிங் -நீலாவதி தம்பதியரின் 3 வயது சோம்நாத் என்ற குழந்தை மாயமானது. இதனையடுத்து போலீசில் புகார் தெரிவித்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒருவர் குழந்தையுடன் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது.
இதனையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் அனாதையாக சுற்றித்திரிந்த அந்த குழந்தையை மீட்ட இளைஞர் ஒருவர், பரங்கிமலை குழந்தைகள் காப்பகத்தில் நேற்று ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.