சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குழந்தை கடத்தல்!

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குழந்தை கடத்தல்!

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திச்சென்ற நபரை சிசிடிவி கேமிரா காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

ஒடிசாவை சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதி, தனது 3 வயது குழந்தையுடன் ரயிலுக்காக காத்திருந்தனர். சுமார் 11.40 மணியளவில் 6வது நடைமேடையில் தூங்கிக்கொண்டிருந்த அவர்கள், கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் ரயில்வே போலீசில் புகாரளித்தனர். சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆராய்ந்தனர். அப்போது ஒரு நபர், குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

இந்நிலையில், கையில் சிவப்பு நிற பையுடன் குழந்தையை தூக்கிச் செல்லும் அந்த நபர் யார் என்று ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ரயில்வே போலீசின் ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்