மணப்பாறை:
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மணப்பாளை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் நேற்று ஆழ்துளை கிணறு ஒன்றில் குழந்தை சுர்ஜித் விழுந்தான். அந்த சிறுவனை மீட்க கடந்த 21 மணி நேரமாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பேரிடர் மீட்புக்குழு அதிகாரி கூறுகையில், இடுக்கி போன்ற கருவியால் மீட்க முடியாவிடில் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க முடிவு செய்துள்ளோம். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.