நீரில் மூழ்கி சிறுவன் பலி

  • In Chennai
  • November 26, 2019
  • 185 Views
நீரில் மூழ்கி சிறுவன் பலி

சென்னை:

சென்னையில் வீட்டின் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே பள்ளிகரணை மல்லிகேஸ்வரன் நகரில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரின் 4 வயது மகன் கிருத்திக் ராஜ், வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திறந்துகிடந்த நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்தான்.

உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்