பெற்றோர் கண்முன்னே பலியான சிறுவன்

பெற்றோர் கண்முன்னே பலியான சிறுவன்

ஒசூர்:

ஓசூரில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பேருந்தில் சிக்கி பெற்றோர் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வடமாநிலங்களை சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்டோர் தங்கி தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

இன்று மாலை கணவன் மனைவி மற்றும் மகன் என 3 பேரும் ஓசூர் – பாகலூர் மாநில நெடுஞ்சாலை சமத்துவபுரம் என்னுமிடத்தில் சாலையை கடக்க வந்ததாக கூறப்படுகிறது.

மாலை நேரம் என்பதால் தனியார் பள்ளி பேருந்துக்களும், வேலை முடித்து செல்வோர் என போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், பெற்றோரிடமிருந்து தப்பித்து சாலையை கடந்து மீண்டும் பெற்றோரை நோக்கி ஓட முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு வந்த 4 வயது சிறுவன் அமர், கர்நாடக அரசுப்பேருந்து சிக்கி உயிரிழந்தான். பெற்றோர் கண்முன்னே ஓடிவந்த சிறுவன் பேருந்தின் டயரில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் பெற்றோரை குலைநடுங்க வைத்துள்ளது.

சிறுவனை மடியில் வைத்து தாய் அழுவதும், மகனை காண முடியாமல் தந்தை கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த ஹட்கோ போலிசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்துக்காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்