சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 4 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 4 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகிலுள்ள வடக்கு செவல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவர் தனியார் கடல் மீன் உணவு கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

அதே கம்பெனியில் விளாத்திக்குளத்தை சேர்ந்த 16வயது சிறுமி ஒருவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 1 வருடம் மேலாக காதலித்து வந்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட சிறுமியின் பெற்றோர் மகளை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வீட்டிலே இருக்க சொல்லிவிட்டனர்.

இவர்கள் இருவரும் அடிக்கடி ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஒரு நாள் சிறுமியை சுரேஷ்குமார் தன்னோட இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது வேம்பார் கடற்கரை பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார் சுரேஷ்குமார். அதே இடத்துக்கு தன்னோட 3 நண்பர்களையும் வரவழைத்துள்ளார்.

சுரேஷின் நண்பர்கள் சிறுமிக்கு பாலியல் ரீதியா தொல்லை கொடுத்துள்ளனர். அதிர்ந்துபோன சிறுமி சத்தம்போட்டு கூச்சலிட்டுள்ளார்.

அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் சிறுமியின் சத்தத்தை கேட்டு ஓடி வந்துள்ளனர்.

அப்போது சுரேஷ் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து சுரேஷ்குமார் அவர்களது நண்பர்களான ராமலிங்கம், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகியோரை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

இதனையடுத்து 4 பேரும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்