சென்னை:
சென்னையில் சிறார்களின் ஆபாசப் படம் பார்த்த 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
சிறார்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்த வைப்போர்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குந்தைகள் மற்றும் பெண்களுக்குக எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அன்மையில் திருச்சியில் ஒருவரை போலீசார் கைகது செய்தனர். மேலும் 330 பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சூளைமேட்டில், சிறார்களின் ஆபாச படத்தை செல்போனில் டவுன்லோடு செய்து வைத்திருந்த 72 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சிறார்களின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கல்லூரி மாணவிகள் சிலரிடம் காட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் என மொத்தம் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.