மரபு மீறி நடராஜர் கோயிலில் திருமணம்

மரபு மீறி நடராஜர் கோயிலில் திருமணம்

சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சம்பவத்தால் பட்டு தீட்ஷிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11ம் தேதி சிவகாசியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவரது வீட்டு திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தை பார்த்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
திருமணத்திற்காக தங்கக் கோபுரம் மீது ஏறியுள்ளனர். இது தவறான செயல் என்று இந்து ஆலய பாதுகாப்பு குழு கூறியுள்ளது.

மேலும், திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஆயிரங்கால் மண்டபம் வரை காலணி அணிந்து சென்றுள்ளனர்.

இந்த செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்துக்கு பட்டு தீட்ஷிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது போன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்