‘‘தப்பியோட அவசியமில்லை’’

‘‘தப்பியோட அவசியமில்லை’’

புதுடெல்லி:

தப்பியோட அவசியமில்லை என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் விளக்கம் அளித்து ப.சிதம்பரம், நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியமில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அழைத்தபோதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன்.

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நான் எங்கும் தப்பி ஓட வேண்டிய அவசியமில்லை. முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் குறிப்பிடாத நிலையில், முன் ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்? தப்பிச்செல்ல சாட்சிகளை கலைக்க முயற்சி செய்ததாக என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்