இடைக்கால ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு

இடைக்கால ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு

புதுடெல்லி:

இடைக்கால ஜாமீன் கேட்டு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயிடம் கைதாகி திகார் சிறையில் இருந்து வருகிறார். தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனு செய்தும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு, அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்