புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி, தற்போது சிபிஐ காவலில் இருந்து வருகிறார். மேலும் அமலாக்கத்துறை கைது செய்வதிலிருந்து தப்பிக்க அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்யவேண்டும் என்றால் கீழமை நீதிமன்றத்தை அனுகலாம் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொருளாதார குற்றங்கள் பொருளாதார நிலையை பாதிக்கும். முன்ஜாமீன் பெறுவது அடிப்படை உரிமை அல்ல. வழக்கமான நீதிமன்றத்தை அனுகலாம். தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.