காஷ்மீர் பிரச்சனை திசை திருப்பவே சிதம்பரம் கைது

காஷ்மீர் பிரச்சனை திசை திருப்பவே சிதம்பரம் கைது

சென்னை:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரவு அதிகாரிகள் டெல்லியில் நேற்று இரவு கைது செய்தனர்.

இது பற்றி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி., சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேல்மட்டத்தினருக்கு வளைந்து கொடுக்கும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பழிவாங்கும் மற்றும் கீழ்த்தர செயல்.

அரசியல் பழிவாங்கும் செயலாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எந்த அவசியமும் கிடையாது.

காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரின் தோற்றத்தினை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்