சென்னை:
பிரதமர் மோடி ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.
அவரை தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பிரதமர் பேசினார். சென்னைக்கு வருவது எப்போதும் எனக்குப் பிடிக்கும்.
இப்படி வரவேற்பு கொடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.