தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக்குகள் விற்க தடை..!

தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக்குகள் விற்க தடை..!

சென்னை:

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்குகள் விற்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை தனியார் பள்ளியில் நோட்டுப்புத்தகங்களுக்கு ரூ.5 ஆயிரம், புத்தகங்களுக்கு ரூ.5 ஆயிரம் ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் என வாங்க நிர்பந்திப்பதாக, ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விராணை செய்த நீதிபதி, ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது எனவும் அதே நேரத்தில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள் இவற்றை விற்கலாம் என வழக்கை ஜூன் 10ம் தேதிக்க ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்