சென்னை:
காலநிலை மாற்றத்தின் காரணமாக வரும் 2100ம் ஆண்டுக்குள் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால், இமயமலையின் பனிப்பாறைகள் உருகிவருவதால் வரும் 2100ம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் ஐநா எச்சரித்துள்ளது.
கடல் மட்டம் 2100ம் ஆண்டுக்குள் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு கடலில் நீர் மட்டம் உயரும் எனவும், இந்தியாவின் கடற்கரை நகரங்களான மும்பை, கொல்கத்தா, சூரத் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள 45 நகரங்களுக்கு வெள்ள அச்சுறுத்தல் உள்ளதாகவும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.சபையின் குழு தெரிவித்துள்ளது.