பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

சென்னை:

சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி வல்லரசு உள்ளிட்டோர் சென்னை வியாசர்பாடி எம்.என்.கார்டன் பகுதியில் நின்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் முதல்நிலை காவலர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் அங்கு விரைந்து ரவுடிகளை கைதுசெய்ய முயற்சித்தனர். அப்போது ரவுடி வல்லரசு தனது கூட்டாளிகளுடன் பயங்கர ஆயுதங்களை கொண்டு காவலர் பவுன்ராஜ் மீது சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சாய்ந்து விழுந்தார். இதனையடுத்து உடனடியாக காவலர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதில், ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

தலையில் 28 தையல்கள் போடப்பட்டு காவலர் பவுன்ராஜ் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்