சென்னையில் கமாண்டோ படை:புதிய வியூகம் என்ன?

சென்னையில் கமாண்டோ படை:புதிய வியூகம் என்ன?

சென்னை மாநகராட்சியில் இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் 12,000த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளது கடந்த மூன்று மாதமாக இந்த இரண்டு பகுதிகளுக்கு மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட IAS, IPS அதிகாரிகள், 3000 திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், மைக்ரோ நிலை திட்டங்கள் என கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல வியூகங்கள் வகுக்கப்பட்டன.

அதனால் காக்கா தோப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொற்று குறைந்தாலும் மற்ற இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பரவலாக எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதற்கு மக்கள் அடர்த்தியும் ஒரு காரணம் என்பதால் பெரும்பாலானோரை அருகே உள்ள கொரோனா கேர் சென்டர்களில் தங்கவைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் அங்கையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, வீடு வீடாக சென்று நாள் தோரும் காய்ச்சல் சோதனை மற்றும் கபசுர குடிநீர் விநியோகம் என சென்னை மாநகராட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன் அடுத்த கட்டமாக காவல்துறையின் கமாண்டோ பிரிவு களத்தில் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவாக உள்ள கமாண்டோ வீரர்கள் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்து சென்று மக்கள் தேவையின்றி நடமாடுகிறார்களா என கண்காணிப்பார்கள். உரிய காரணங்கள் இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

இத்தகைய கடுமையான நடவடிக்கையால் இருபது நாட்களில் தொற்று எண்ணிக்கையை இந்த பகுதிகளில் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்