சென்னை:
சென்னையில் ரூ.1.56 கோடியை போலீசார் துரத்தியதால் மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர்.
சென்னை, கோட்டூர்புரம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட முயன்றபோது, கையில் வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, ரூ 1.56 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த பணம் சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.