புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை அவரது வீட்டில் சிபிஐ கைது செய்தது. பின்னர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட 14 பேர் மீது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.