விஜயவாடா:
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறுவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று, ஜெகன் மோகன் முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு நலத்திட்டப்ணிகள் மற்றும் அதிரடி திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு, அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டியுள்ள சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள, மாநாட்டு மண்டபத்தை இடிக்க உள்ளதாக, முதல்வர், ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்திரபாபு மகனும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷிற்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.