புதுடெல்லி:
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், காங். உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவை வழங்கினர்.
அந்த புகார் மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது முரண்பாடுகள் தென்பட்டால், அந்த தொகுதியில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்கும் 5 வாக்குச்சாவடிகள் எது என்பதை, வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னதாகவே அடையாளம் காண வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.