சந்திரபாபு நாயுடு காணவில்லை; போலீசில் புகார்

சந்திரபாபு நாயுடு காணவில்லை; போலீசில் புகார்

குப்பம்:

குப்பம் எம்எல்ஏ சந்திரபாபு நாயுடு காணவில்லை என கண்டுபிடித்து தருமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரசார் போலிசில் புகாரளித்தனர்.

ஆந்திரா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்தாண்டு ஆந்திராவில் நடைப்பெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து ஜகன்மோகன் ரெட்டி முதல்வரானார்.

ஆனாலும், சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவர் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை என்பதால், அவர் காணாமல் போய்விட்டதாக கூறி குப்பம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக வலம் வந்து குப்பம் நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்