மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

கொல்கத்தா:

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சரத்பவார், கேஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்