புதுடெல்லி:
நாளை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதை கண்டித்தும், ஓப்புகை சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை முதலில் எண்ணக்கோரியும் தர்ணாவில் ஈடுபடப்போகிறோம்.
இந்த போராட்டம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுட்ன தொலைபேசியில் பேசியுள்ளேன். மேலும், மத்தியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார்.