அமலாக்கத்துறை அலுவலகத்தில் சாந்தா கோச்சார் மீண்டும் ஆஜர்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் சாந்தா கோச்சார் மீண்டும் ஆஜர்!

புதுடெல்லி:

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ., சாந்தா கோச்சார் மீண்டும் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு, வீடியோகான் நிறுவனத்துக்கு, ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டது. இதில், ரூ.2,849 கோடி நிலுவையில் உள்ளது.

கடன் வழங்கியதற்கு கைமாறாக தன்னுடைய கணவர் அறக்கட்டறைக்கு பல கோடி ரூபாய் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், வருமானவரித்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் சாந்தா கோச்சார்.

கடந்த 9ம் தேதி பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் சாந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறையின் விசாரணை நடத்திய நிலையில், இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பாக, அவரிடம் வாக்குமூலங்கள் பெற அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்