5 சவரன் நகை பறிப்பு

5 சவரன் நகை பறிப்பு

ஒசூர்:

ஓசூரில் பட்டப்பகலில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரம் தங்கநகைகளை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பட்டப்பகலில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனங்களில் வந்த இரண்டு மர்மநபர்கள் தங்கநகையை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஒசூர் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் ஆனந்த நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்குமார் இவரது மனைவி திலகவதி இவர் இன்று மாலை பள்ளிக்கு சென்ற மகளை வீட்டிற்கு அழைத்து வர தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் இருசக்கரவாகனத்தில் ஹெல்மட் அணிந்தபடி வந்த இரண்டு பேர் திலகவதியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கநகைகளை பறித்து சென்றனர். பட்டபகலில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் ஒசூர் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் வீ டுகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்து நகை பறிப்பில் ஈ டுபட்ட மர்மநபர்கள் காட்சிகள் பதிவாகி உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்