புதுடெல்லி:
இந்தியாவிலிருந்து துருக்கி செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது தொடர்பாக பாகிஸ்தான் நிலைபாட்டுக்கு துருக்கி அரசு ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும் கடந்த மாதம் நடந்த ஐநா கூட்டத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் பேசியிருந்தார்.
இதனால், இந்தியா துருக்கி இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் துருக்கி பயணமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து துருக்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.