சிபிஐ கேவியட் மனு தாக்கல்

சிபிஐ கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி:

ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ப.சிதம்பரம் மீதான ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து, தலைமை நீதிபதியிடம் ப.சிதம்பரம் தரப்பில் முறையிட மனுதாக்கல் செய்தனர். இதனையடுத்து, சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்