சென்னை:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தேனி தனிப்படை போலீசார், உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை திருப்பதி அருகே கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை அழைத்து வந்து சிபிசிஐடி போலீசாரிடம் உதித் சூர்யா குடும்பத்தினர் ஒப்படைத்தனர். பின்னர், ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.