பெங்களூரு:
காவிரியிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம், தலைவர் நவனீ குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் குறித்தும், ஆகஸ்ட்டில் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில், காவிரியிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8ம் தேதி டெல்லியில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.