காவிரி கரையோரம் மக்களுக்கு ‘அலர்ட்’

காவிரி கரையோரம் மக்களுக்கு ‘அலர்ட்’

சென்னை:

காவரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுதுதுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 2.25 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என காவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மாநில பேரிடர் மேலாண்மை குழுவும், 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் இருக்கவும், உரிய நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்