இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

புதுடெல்லி:

கர்நாடகம் அரச நீர் திறக்காதது குறித்து பேச காவிரி மேலாண்மை ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது.

கடந்த மாதம் 28ம் தேதி கூடிய கூட்டத்தில், தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடகம் தனது அணைகளில் நீர் இல்லை என்றும், குடிநீருக்கே திண்டாடுகிறோம் என்று கர்நாடக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விடாதது குறித்து ஆலோசிக்க இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை மாதம் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்