இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

சென்னை:

டெல்லியில் நடப்பு ஆண்டின் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், தண்ணீர் திறந்து விடுவது குறித்து ஆணையம் தரப்பில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், விவாசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் கடந்த 23ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில், ஜூன் 1ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்தியும், கர்நாடக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் சார்பில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடுதல், மேகதாது அணைக்கு எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கபட உள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்