பெங்களூரு:
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம், தலைவர் நவனீ குமார் தலைமையில் பெங்களூருவில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் குறித்தும், ஆகஸ்ட்டில் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.