நாங்குநேரி:
நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2000 நோட்டு பணக்குவியலுடன் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கையும் களவுமாக பிடிபட்டவர்களிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவேந்திர குல வேளாள சமுதாயத்தினர் கிராமங்களில் தேர்தலை புறக்கணிப்பட்டுள்ள நிலையில், அங்கு பணப்பட்டுவாடா செய்தது குறிப்பிடத்தக்கது.