பணப்பட்டுவாடா: திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

பணப்பட்டுவாடா: திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி:

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடாவுக்கு பணம் வைத்திருந்ததாக திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்ததையடுத்து, அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவாக கிராம மக்கள் புகாரின் பேரில் திமுக எல்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அத்துமீறியதாக கிராம மக்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்