காணாமல் போன விமானம்: தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம்..!

காணாமல் போன விமானம்: தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம்..!

ஷிலாங்:

காணாமல் போன ஏஎன் 32 பற்றிய தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என இந்திய விமானப்படை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் ஏன் 32 ரக விமானம், 13 பேருடன் அசாமின் ஜோர்கத் விமான நிலையத்திலிருந்து கடந்த 3ம் தேதி பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்று காணாமல் போனது.

இந்த விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படையின் சுகாய் சி130 விமானம் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் இஸ்ரோவின் உதவியை நாடியது. கடந்த 5 நாட்களாக காணாமல்போன விமானத்தை தேடும்பணியில் விமான ஆராய்ச்சி மையத்தின் 5,000 கண்காணிப்பு விமாங்கள் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் உளவு செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவற்றை கொண்டு விமானத்தை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காணாமல் போன ஏஎன்32 ரக விமானத்தை பற்றி நம்பகமான தகவல் கொடுக்கும் நபருக்கோ அல்லது குழுவுக்கோ ரூ.5 லட்சம் பரிசளிக்கப்படும் என பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளரும், விங் கமாண்டர் ரத்னாகர் சிங் மற்றும் ஏர்மார்ஷல் மதூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்