காத்நகர்:
பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா மீது உத்தரபிரதேச மாநில போலீசார் வழக்குப்பதி செய்யப்பட்டுள்ளனர்.
நடிகை சோனாக்ஷி சின்ஹா ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.24 லட்சம் பெற்றுக்கொண்டு, நிகழ்ச்சியை நடத்தாமல் ஏமாற்றியதாக காத்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், நடிகை சோனாக்ஷி சின்ஹா மீது 420 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைதுசெய்வதற்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்க போலீசார் சென்றபோது அவர் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.