சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான் மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
பிரதமர், குடியரசுத்தலைவர், அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும் நடிகர் மன்சூர் அலிகான் ஒருமையில் பேசியதாக இந்து முன்னணி கட்சி சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஏற்கெனவே மன்சூர் அலிகான் 8 வழிச்சாலை விவகாரத்தில் வன்முறையை தூண்டு வகையில் பேசியதாக கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்து முன்னணியின் புகாருக்கு, மன்சூர் அலிகான் மீது பிரிவினையை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.